உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி புதிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் செளரவ் கங்குலி.
பிரபல ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இனிமேல் மாற்றுத் திறனாளிகளுக்காக 50 இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று கங்குலி அறிவித்துள்ளார். ஜி பிளாக்கில் உள்ள முன்வரிசை இருக்கைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களைச் சிரமம் இன்றி அவர்கள் பார்த்துச் செல்லும்வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சிறப்புக் கழிப்பறைகள் கட்டப்படும். வீல்சேர்கள் வசதிகள் செய்து தரப்படும் என்று கங்குலி கூறியுள்ளார்.