சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நாக் அவுட் சுற்றுக்கு இந்திய நட்சத்திரம் கே.ஸ்ரீகாந்த் முன்னேறியுள்ளார்.
சீனாவின் புஷு நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை துவக்க சுற்று ஆட்டம் ஒன்றில் கே.ஸ்ரீகாந்த் 21-12, 21-16 என்ற கேம் கணக்கில் பிரான்ஸ் வீரர் லுகாஸ் கார்வியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
அதே நேரத்தில் எச்.எஸ்.பிரணாய் 11-21, 14-21 என்ற கேம் கணக்கில் ஆசிய போட்டி சாம்பியன் ஜோனத்தான் கிறிஸ்டியிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ஜக்கா 12-21, 16-21 என தாய்லாந்தின் பொர்னபவியிடம் தோல்வியுற்றார். ஏற்கெனவே மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி.சிந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியள்ளார்.