2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிரடியாக ஆடிய ரோஸ்டன் சேஸ் சதமடித்தார். 189 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 52 ரன்கள் சேர்த்தார்.
இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.