துபையில் ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இரவு அனுமதி பெறாமல் வெளியில் கலைநிகழ்ச்சிக்கு சென்று வந்த பாக். வீரர் உமர் அக்மலுக்கு ஆட்ட ஊதியத்தில் 20 சதவீதம் அபாரதம் விதித்தது பாக். கிரிக்கெட் வாரியம்.
இந்தியாவுக்கு ஆறுதல் தரும் வகையில், வரும் ஜூன் மாதம் புவனேசுவரத்தில் ஹாக்கி சீரிஸ் பைனல் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அனுமதி தந்துள்ளது. வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் ஆட்டமாக இது உள்ளதால், இந்திய அணிக்கு எளிதில் வெற்றிவாய்ப்பு இருக்கும் என கருதப்படுகிறது.
ஐபிஎல் ஆட்டங்களை பாகிஸ்தானில் ஒளிபரப்ப தடை விதித்து அந்நாட்டு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பவாட் செளதரி கூறியுள்ளார்.
இந்திய ஸ்குவாஷ் அணிகளுக்கு முழுநேர வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்காமல், போட்டிகளின் அடிப்படையில் பயிற்சியாளரை நியமிக்க ஸ்குவாஷ் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த 2018 காமன்வெல்த் போட்டியில் இருந்து பயிற்சியாளர் இல்லாமல் இந்திய அணிகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
ஆசிய கோப்பை கால்பந்து (ஏஎப்சி) குழு பிரிவு போட்டியின் ஒரு பகுதியாக ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னையின் எஃப்சி அணி.