உலக பாட்மிண்டன் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் பி.வி.சிந்துவும்-சீன தைபேவின் பேய் யு போவும் மோதினர். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-14, 21-14 என்ற கேம் கணக்கில் 43 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் மேக்னா-ஜக்கம்புடி இணை 8-21, 18-21 என்ற கேம்கணக்கில் 8-ஆம் நிலை இணையான ஜப்பானின் ஷிஹோ-கோஹருவிடம் தோல்வியுற்று வெளியேறினர்.