மலேசிய மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியா சார்பில் சாய்னா நேவால் மட்டும் தான் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் சாய்னா நேவால், கரோலினா மரினை எதிர்கொண்டார். வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த போட்டியில் கரோலினா மரின் 21-16, 21-13 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம், இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சாய்னா நேவால் இழந்தார்.