பிரபல கால்பந்து வீரர் நெய்மர் (பிரேசில்) மீதான பாலியல் வன்கொடுமை புகாரை போதிய ஆதாரமில்லை எனக்கூறி கைவிட்டது சாவ்போலோ காவல்துறை.
நாஜிலா டிரின்டேட் என்ற பிரேசில் இளம்பெண், பாரிஸ் ஓட்டலில் கடந்த மே மாதம் நெய்மர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என புகார் கூறினார். இதை நெய்மர் தீவிரமாக மறுத்த நிலையில், சாவ்போலோ போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நெய்மர் மீதான புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.