உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
நெதர்லாந்தின் டென்பாஸ்ச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ரெக்கர்வ் ஆடவர் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சீனாவிடம் 2-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ், அதானு ஆகியோர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
இந்திய அணி வெள்ளி, 2 வெண்கலத்தோடு இந்த போட்டியில் மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.