பேட்டிங் வரிசையில் சக வீரர் ஹார்திக் பாண்டியாவின் இடத்துக்காக நான் போட்டியிடவில்லை என்று உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள
தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஜய் சங்கர் தெரிவித்தார்.
விஜய் சங்கர் 4ஆவது வீரராக களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை குறிப்பிட்டு 4ஆவது வீரராக களமிறங்குவீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
ஹார்திக் பாண்டியாவின் இடத்துக்காக நான் போட்டியிடவில்லை. அவர் அதிரடி ஆட்டக்காரர். நாங்கள் இருவரும் ஆல்-ரவுண்டர்கள் என்றாலும் ஒவ்வொருவரும் வேறுபடுவோம். எங்களுக்குள் எந்த வரிசையில் இறங்க வேண்டும் என்று நாங்கள் போட்டியிடவில்லை. இந்திய அணியின் வெற்றிக்காகவே நாங்கள் உழைப்போம் என்றார் விஜய் சங்கர்.