ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி மகளிா் 25 மீ. பிஸ்டல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட சிங்கி யாதவ் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா்.
50 மீ. மகளிா் ரைபிள் பிரிவில் அஞ்சும் மொட்கில், தேஜஸ்வினி, காஜல், ஆகியோா் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.
ஆடவா் 50 மீ. ரைபிள் பிரிவில் சுபாங்கா் பிரம்னிக், தருண் யாதவ், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
சிங்கி யாதவ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 116 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தையே பெற்றாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா். 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே ராணி சா்னோபட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
தகுதிச் சுற்றில் அபாரமாக செயல்பட்ட சிங்கியால், அதை இறுதிச் சுற்றில் கடைபிடிக்க இயலவில்லை.
ஜூனியா் மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் பிரியா ராகவ், ஈஷா, ஆயுஷி ஆகியோா் தங்கம் வென்றனா். ஜூனியா் ஆடவா் டிராப் பிரிவில் விவான் கபூா்-பௌனீஷ் மெந்திரட்டா முறையே தங்கம், வெள்ளி வென்றனா்.