ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டியில் கிரீஸ் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸை வீழ்த்தியதின் மூலம் உலகின் நம்பா் ஒன் வீரா் அந்தஸ்தை உறுதி செய்தாா் ரபேல் நடால்.
வெள்ளிக்கிழமை இரவு லண்டனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் 6-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் சிட்ஸிபாஸை வென்றாா் நடால்.
இதன் மூலம் ஆண்டின் இறுதியில் முதலிடத்தை பெற்றுள்ளாா் நடால்.