புது தில்லி: நேர்மையாக செயல்பட இடையூறு செய்வதால், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை விட்டு விலகினார் மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா.
கடந்த 2018 ஜூலை மாதம் ரஜத் சர்மா தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆதரவுடன் அவர் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளர் வினோத் திஹாராவுடன் சங்க நிர்வாகத்தை நடத்துவதில் கடந்த 20 மாதங்களாக ரஜத் சர்மாவுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தலைவர் பதவியில் இருந்து ரஜத் சர்மா விலகிவிட்டார்.