இந்தக் கேட்சுக்கு ரிவ்யூவா?:  பார்வையாளர்களை அதிர வைத்த பாகிஸ்தான் வீரர் (விடியோ)  

இந்தக் கேட்சுக்கு ரிவ்யூவா?:  பார்வையாளர்களை அதிர வைத்த பாகிஸ்தான் வீரர் (விடியோ)  

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெளிவாக கேட்சை தரையில் விட்ட பின்னர், பந்தை எடுத்துக் கொண்டு மூன்றாவது நடுவரிடம் வீரர் ஒருவர் ரிவியூ கேட்டு.... 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெளிவாக கேட்சை தரையில் விட்ட பின்னர், பந்தை எடுத்துக் கொண்டு மூன்றாவது நடுவரிடம் வீரர் ஒருவர் ரிவியூ கேட்டு கையை அசைத்தது கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் அணிகள் மோதிய பாகிஸ்தான் கோப்பைக்கான லீக்  போட்டி ஒன்றில் இந்த நிகழ்வு  நடந்துள்ளது. பெடரல் ஏரியாஸ் அணியும் கைபர் பதுன்கவா அணியும் மோதிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற 4 பந்துகளில் கைபர் பதுன்கவா அணிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது.

அப்போதுதான் பேட்ஸ்மேன் வானில் தூக்கி அடித்த பந்தானது டீப் மிட்விக்கெட் பகுதியில் பீலடிங் செய்து கொண்டிருந்த அகமது ஷேஷாத் கையில் வந்தது, மிக எளிதான அந்த கேட்ச்  நழுவி, தரையில் பட்ட பந்தினை கையால் எடுத்த ஷேஷாத் அது கேட்ச் என்பதை உறுதி செய்ய 3ம் நடுவரிடம் ரிவியூ கேட்டது தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஆட்டத்தின் இறுதியில் கைபர் பதுன்க்வா அணியே வென்றது.

முன்னரே அவர் இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டி ஒன்றிலும் இவ்வாறு செய்ததையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவரது பல்வேறு மோசடிகள் குறித்து விடப்பட்ட தொடர் எச்சரிக்கைகளின் காரணமாகவே, 2019 உலகக்கோப்பைகான பாகிஸ்தான்  உத்தேச வீரர்கள் பட்டியலில் ஷேஷாத் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com