களிமண் தரை டென்னிஸ் சீசன் தொடக்கம்: நடால், ஜோகோவிச்சுக்கு காத்திருக்கும் சவால்

நிகழாண்டு களிமண் தரை டென்னிஸ் சீசன் தொடங்க உள்ள நிலையில் நடால், ஜோகோவிச்சுக்கு கடும் சவால் காத்துள்ளது.

நிகழாண்டு களிமண் தரை டென்னிஸ் சீசன் தொடங்க உள்ள நிலையில் நடால், ஜோகோவிச்சுக்கு கடும் சவால் காத்துள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய களிமண் தரை சீசன் தொடங்குகிறது. மான்டோ கார்லோ மாஸ்டர்ஸ் போட்டி இதில் முதலாவதாகும். 11 முறை சாம்பியனான ரபேல் நடால் முட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அதில் இருந்து முழுமையாக குணமடைந்து மைதானத்தில் களமிறங்க வேண்டும்.
 அதே நேரத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இந்தியன்வெல்ஸ் மற்றும் மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதியோடு தோற்று வெளியேறினார். ஏடிபி அமைப்பு ரீதியில் ஜோகோவிச் தலையிட்டதால், தனது கவனம் சிதறி தோல்வியுற்றேன் என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
 கடந்த ஆண்டு விம்பிள்டன், யுஎஸ் ஓபனில் பட்டம் வென்ற ஜோகோவிச், ஆஸி. ஓபனிலும் வென்றார்.
 பெடரர் விலகல்: அதே நேரத்தில் ரோஜர் பெடரர் மான்டே கார்லோ போட்டியில் இருந்து விலகி விட்டார். அவர் அடுத்த மாதம் மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com