லூதியானாவில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பைக்கான தேசிய கால்பந்து சாம்பியன் போட்டியில் சர்வீஸஸ் அணி 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. பஞ்சாப் அணியும்-சர்வீஸஸ் அணியும் மோதியதில் சர்வீஸஸ் வீரர் பிகாஷ் தாப்பே அடித்த ஓரே கோல் வெற்றி கோலாக மாறியது. இதன் மூலம் 6-ஆவது முறையாக சாம்பியன் ஆனது சர்வீஸஸ்.