தில்லியில் நடைபெறும் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கேரளத்தின் எலிசபெத் சூசன் கோசி, மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு, அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் விண்ணப்பித்துள்ளார். அவர் தற்போது ஜிம்பாப்வே அணி பயிற்சியாளராக உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வீரர் மயங்க் மார்கண்டேவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை வாங்கிக் கொண்டது.
இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர் தேர்வில் நடுநிலையாகச் செயல்படுவோம் என்றும், எவரது பரிந்துரையையும் ஏற்க மாட்டோம் என்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறியுள்ளார்.