துளிகள்...


    தில்லியில் நடைபெறும் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கேரளத்தின் எலிசபெத் சூசன் கோசி, மகளிருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 


    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு, அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் விண்ணப்பித்துள்ளார். அவர் தற்போது ஜிம்பாப்வே அணி பயிற்சியாளராக உள்ளார். 


    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது வீரர் மயங்க் மார்கண்டேவை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியிலிருந்து மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை வாங்கிக் கொண்டது. 


    இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர் தேர்வில் நடுநிலையாகச் செயல்படுவோம் என்றும், எவரது பரிந்துரையையும் ஏற்க மாட்டோம் என்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர் அன்ஷுமன் கெய்க்வாட் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com