வாஷிங்டன் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு நிக் கிர்ஜியோஸ்-டேனில் மெத்வதேவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரர் கிரீஸின் சிட்சிபாûஸ 6-4. 3-6, 7-6, என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ஆஸி. வீரர் கிர்ஜியோஸ்.
மற்றொரு அரையிறுதியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோசிக்கை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். மகளிர் பிரிவில் அமெரிக்காவிந் ஜெஸிக்கா பெகுலா-இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி முன்னேறினர்