பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கியப் பயிற்சியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்தில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடனான கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்துள்ளது. இன்று நடைபெற்ற பிசிபி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவும் திட்டமிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com