புரோகபடி லீக் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெங்கால் வாரியர்ஸ் அணி 32-30 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.
பாட்னாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் யு மும்பா அணி ஆதிக்கம் செலுத்தியது. அர்ஜுன் தேஸ்வாலின் சிறந்த டைடுகள் மும்பா அணிக்கு வலு சேர்த்தனர். முதல் பாதி ஆட்ட முடிவில் மும்பா அணி 16-11 என முன்னிலை பெற்றிருந்தது. எனினும்
2ஆவது பாதி ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பெங்கால். பிரபஞ்சனின் சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை பெற்ற பெங்கால் இறுதியில் 32-30 என வெற்றி பெற்றது.