சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும், மகளிர் பிரிவில் மடிஸன் கீய்ஸும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதியில் அமெரிக்காவின் மடிஸன் கீய்ஸ் 7-5, 7-6 என்ற செட் கணக்கில் விட்லனா குஸ்நெட்úஸாவாவை வென்று பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் 24-ஆவது பட்டமாகும்.
ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் டேவிட் கோபினை வீழ்த்தி பட்டம் வென்றார், கடந்த வாஷிங்டன், மாண்ட்ரீயல் ஓபன் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றார் மெத்வதேவ்.