தமிழ்நாடு சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டி.வாசு, துணைப் பயிற்சியாளராக ஆர்.பிரசன்னா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் 2019-20 சீசனுக்கு இருவரும் பயிற்சியாளர்களாக செயல்படுவர். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற டிஎன்சிஏ செயற்குழுக் கூட்டத்தில் இந்நியமனங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது என இணைச் செயலாளர் ஆர்ஐ.பழனி கூறியுள்ளார்.