இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
தற்போது இந்திய அணியின் இருந்து 2 மாத காலம் விடுப்பு எடுத்துள்ள தோனி, ஜம்மு-காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை வந்தடைந்த தோனி, விமானநிலையத்தில் இருந்த ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது தலையில் கறுப்பு நிற பந்தானா அணிந்திருந்த தோனியின் அந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.