இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2 முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி 2019-20 சீசனுக்கு தயாராகும் வகையில் ஆமாதபாதில் உள்ள அதானி சாந்திகிராம் மைதானத்தில் 4 வாரங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளது. தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரகோரி மற்றும் வீரர்கள் நேரடியாக செப்டம்பர் 1-ஆம்தேதி முகாமில் பங்கேற்பர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி மகளிர் 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் அஞ்சலி தேவி 51.53 வினாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
உலக தடகளப் போட்டிக்கான தகுதி நேரம் 51.80 வினாடிகள் ஆகும். 100 மீ. ஓட்டத்தில் தூத்தி சந்த் 11.34 வினாடிகளில் கடந்தார். உலகப் போட்டிக்கு தகுதி பெற அவர் வெள்ளிக்கிழமை இறுதிச் சுற்றில் 11.24 வினாடிகளில் கடக்க வேண்டும்.
மேற்கு வங்க மாநிலம் கல்யாணியில் நடைபெற்று வரும் 15 வயதுக்குப்பட்டோர் மகளிர் சாஃப் கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய-நேபாள அணிகள் தகுதி பெற்றுள்ளன.