டாஸ் வென்ற போலார்டு பந்துவீச்சு தேர்வு: மீண்டும் முதலில் பேட் செய்யும் இந்தியா!

இந்தியாவுடனான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற போலார்டு பந்துவீச்சு தேர்வு: மீண்டும் முதலில் பேட் செய்யும் இந்தியா!


இந்தியாவுடனான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதலிரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில், டாஸ் ஜெயித்த மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் போலார்டு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதில் முகமது ஷமியும், யுஸ்வேந்திர சாஹலுக்குப் பதில் குல்தீப் யாதவ்வும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முதலிரண்டு ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணியே பெற்றுள்ளதால், இந்த ஆட்டத்தின் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. எனவே, தொடரைத் தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com