எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது,
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்.
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கியவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருபிரசாத் என தெரியவந்துள்ளது.
சச்சினுடனான அந்த சந்திப்பு குறித்து குருபிரசாத் கூறுகையில், "2001-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியின் போது சச்சினுக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது" என்று தெரிவித்தார்.