ஐபிஎல் ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள 6 வீரர்கள்!

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள்.
ஐபிஎல் ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள 6 வீரர்கள்!

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் புதிதாக 6 வீரர்கள் இணைந்துள்ளார்கள். இதன்மூலம் ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள். வினய் குமார், அசோக் டிண்டா, ராபின் பிஸ்ட், சஞ்சய் யாதவ், மேத்யூ வேட், ஜேக் வெதரால்ட் என ஆறு வீரர்களும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com