ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டி இறுதிச் சுற்றில் மும்பை ராக்கெட்ஸ்-பெங்களூரு ராப்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரில் சனிக்கிழமை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை-ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணிகள் மோதின. இதில் 4-2 என்ற ஆட்டக்கணக்கில் மும்பை ராக்கெட்ஸ் வென்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் மும்பை வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்சென், சமீர் வர்மாவும், , இரட்டையர் பிரிவில் மும்பையின் லீ யோங் டே-கிம் ஜி ஜங் இணையும், வென்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத் நட்சத்திர வீரர் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் மும்பை அணி இறுதிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.