இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர், உதவியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர், மற்றும் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர், உதவியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர், மற்றும் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று இந்தியா வெளியேறியது.
அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரி, மற்றும் உதவியாளர்களுக்கு 45 நாள்கள் பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது பிசிசிஐ.
எனினும் தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள், உடலியக்கவியல் நிபுணர், நிர்வாக மேலாளர், ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவிசாஸ்திரிக்கு நேரடி நுழைவு:  மேலும் தற்போதுள்ள ரவிசாஸ்திரி மற்றும் பயிற்சி உதவியாளர்கள் தேர்வின் போது நேரடியாக பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நியமனங்களில் பிசிசிஐ முடிவே இறுதியானதாகும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 30.7.2019 மாலை 5 மணி ஆகும்.
இந்திய அணியில் தற்போது தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு வரும் ஆக. 3-ஆம் தேதி தொடங்கும் மே.இ.தீவுகள் தொடர் முடியும் வரை 45 நாள்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உலகக் கோப்பை தோல்வியுடன் உடலியக்க நிபுணர் பேட்ரிக் பர்ஹார்ட், பயிற்றுநர் சங்கர் பாசு உடனே பதவியை விட்டு விலகினர்.
தலைமைப் பயிற்சியாளர் தகுதிகள்: புதிய தலைமைப் பயிற்சியாளர் 60 வயதுக்குள்ளும், குறைந்தது 2 ஆண்டுகள் சர்வதேச அனுபவம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். டெஸ்ட் ஆடும் அணிக்கு 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி அளித்திருக்க வேண்டும். மேலும் 30 டெஸ்ட்கள் அல்லது 50 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும். 
கடந்த 2017-இல் அனில் கும்ப்ளேயின் பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்த நிலையில் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்திய கிரிக்கெட்டின் இயக்குநராகவும் 2014 முதல் 2106 வரை பதவி வகித்தார் சாஸ்திரி.
அவரது தலைமையில் பெரிய போட்டி எதையும் இந்திய அணி வெல்லவில்லை. எனினும் ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com