மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஐசிசி கௌரவிப்பு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. 

News image
Updated On :19 ஜூலை 2019, 4:48 am

Raghavendran

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் 6-ஆவது இந்தியரானார்.

Story image

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

பல தலைமுறைகளாக கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். மேலும் இந்த விளையாட்டை பிரபலமடையச் செய்தவர்கள். இதில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதன் மூலம் நான் கௌரவிக்கப்பட்டுள்ளேன். 

எனது இந்த நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது பெற்றோர்கள், சகோதரர் அஜித், மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அதிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் போன்ற ஒரு குருவைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி தான்.

கிரிக்கெட்டை நான் ரசித்து விளையாட உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட், பிசிசிஐ, சக வீரர்கள் மற்றும் என்னை வழிநடத்திய கேப்டன்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது கிரிக்கெட்டைப் பாரட்டிய ஐசிசி-க்கும் நன்றி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட்டும் மேலும் வளரும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.