தோனியின் கோரிக்கைக்கு ராணுவத் தளபதி அனுமதி

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தோனி கலந்துகொள்ள உள்ளார்.
தோனியின் கோரிக்கைக்கு ராணுவத் தளபதி அனுமதி

கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராணுவம் (டெரிட்டோரியல் ஆர்மி) பாராசூட் ரெஜிமெண்ட் உடன் 2 மாதங்கள் தங்கி பணிபுரியப் போவதாக பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். எனவே மே.இ.தீவுகளுடன் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றார்.

இந்நிலையில், தோனியின் கோரிக்கையை ஏற்று ராணுவத் தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தோனி கலந்துகொள்ள உள்ளார். இருப்பினும் பாதுகாப்புத்துறையில் கௌரவப் பதவியில் இருப்பதால் களத்தில் நடைபெறும் செயல்பாடுகளில் தோனி பங்கேற்க அனுமதியில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com