ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டதற்கு நிலேஷ் குல்கர்னி வரவேற்பு

மே.இ.தீவுகள் உடனான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய வீரர் நிலேஷ் குல்கர்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டதற்கு நிலேஷ் குல்கர்னி வரவேற்பு

மே.இ.தீவுகள் உடனான டி20, ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய வீரர் நிலேஷ் குல்கர்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ தேர்வுக் குழு லெக் ஸ்பின்னர் ராகுல் சாஹரை புதுமுகமாக தேர்வு செய்துள்ளது. கடந்த சீசனில் ராகுல் சிறப்பாக பந்துவீசினார். குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் ஆகியோருக்கு காயம் ஏற்படும் நிலையில், மற்றொரு பதிலி சுழற்பந்து வீச்சாளர் தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப ராகுல் சாஹரை சேர்த்துள்ளனர். இதனால் அணிக்கு சாதகமான அம்சமாகும். அணி நிர்வாகம், தேர்வுக் குழுவினர் மே.இ.தீவுகள் தொடருக்கு சிறப்பான அணியை தேர்வு செய்துள்ளனர்.
பயிற்சியாளர்களுக்கு நீண்டகாலம் ஒப்பந்தம் வழங்க வேண்டும். அப்போது தான் அணியின் திறமையான செயல்பாட்டுக்கு உத்தியை வகுக்க முடியும். வீரர்களின் நம்பிக்கையைப் பெற்று, அணியை கட்டமைக்க முடியும் என்றார் குல்கர்னி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com