ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியை இந்திய ஜிம்னாஸ்டிக் சம்மேளனம் புதன்கிழமை அறிவித்தது.
மங்கோலியாவில், வரும் 19 முதல் 22-ஆம் தேதி வரையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த 7-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற தேர்வின் அடிப்படையில், இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 4 வீரர், 4 வீராங்கனைகள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆடவர் பிரிவில் ராகேஷ் குமார் பத்ரா (ரிங்ஸ் & பேர்லல் பார்ஸ்), யோகேஷ்வர் சிங் (ஃப்ளோர் & வால்ட்), தேபாங் டே (போமெல் ஹார்ஸ்), அரிக் டே (ஹரிúஸான்டல் பார்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மகளிர் பிரிவில் பிரனதி நாயக் (வால்ட் & பீம்), ஷ்ரத்தா தலேகர் (அன்ஈவன் பார்ஸ்), பிரனதி தாஸ் (பீம்), பாப்பையா தாஸ் (ஃப்ளோர்) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இவர்களில் தேபாங் டே, பாப்பையா தாஸ் ஆகிய இருவரும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்பது இது முதல் முறையாகும்.