யுவராஜுக்கு முறையாக பிரியாவிடை

யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரருக்கு மைதானத்திலிருந்து முறையாக பிரியாவிடை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள்
யுவராஜுக்கு முறையாக பிரியாவிடை

யுவராஜ் சிங் போன்ற ஒரு வீரருக்கு மைதானத்திலிருந்து முறையாக பிரியாவிடை அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். 
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் திங்கள்கிழமை அறிவித்தார். எனினும், அவருக்கு பிரியாவிடை அளிக்கும் வகையில் ஒரு ஆட்டத்தில் வாய்ப்பளிக்கப்படுவது தொடர்பாக யுவராஜோ, பிசிசிஐயோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. 
இந்நிலையில், இதுதொடர்பாக கபில் தேவ் கூறியதாவது: 
எனது விருப்பத்தின் அடிப்படையில் நான் ஒரு பிளேயிங் லெவன் வீரர்களை தேர்வு செய்வதென்றால், அதில் எப்போதும் யுவராஜ் சிங்கிற்கு இடம் இருக்கும். 
அவரைப் போன்ற ஒரு வீரர் மைதானத்தில் ஆட்டத்தின் முடிவின்போது நான் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவிக்கும் வகையில், அவருக்கு முறையான பிரியாவிடை அளிக்க வேண்டும். 
அவர் கிரிக்கெட் ஆடிய விதம், தனது புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த விதம் எதுவும் எளிதானது அல்ல. அவர் மைதானத்தில் சாதித்ததை விட அதிகமாக இனி வரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்று கபில் தேவ் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com