உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் மைதானத்தில் மழை பெய்ததால் மீண்டும் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறக்கியது. இந்நிலையில் 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிறகு ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.