பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி துரிதமாக 11,000 ரன்களை கடந்து புதிய உலக சாதனையை படைத்தார்.
ஏற்கெனவே இந்திய ஜாம்பவான் சச்சின் 276 ஆட்டங்களில் 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி வெறும் 222 ஆட்டங்களில் 11,000 ரன்களை கடந்து சச்சின் சாதனையை முறியடித்தார்.
சச்சின், கங்குலியுடன் 11 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர், சர்வதேச அளவில் 9-ஆவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார் கோலி. இந்த ஆட்டத்தில் இந்தியா 336/5 ரன்களை குவித்தது. ரோஹித் சர்மா 140 ரன்களை
விளாசினார்.