நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 7-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
நார்வேயின் ஸ்டவென்ஜர் நகரில் நடைபெற்று வரும் அல்டிபாக்ஸ் செஸ் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்மீனியாவின் லெவன் ஆரோனியனுடன் 9-ஆவது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் மோதினார் ஆனந்த்.
இதில் ஆதிக்கம் செலுத்திய ஆரோனியன் வென்றார். இதைத் தொடர்ந்து 8 புள்ளிகளுடன் 7ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார் ஆனந்த்.
உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸன் 13.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.