துர்க்மேனிஸ்தானை 10-0 என பந்தாடியது இந்தியா

துருக்கி கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டியில் துர்க்மேனிஸ்தானை 10-0 என்ற கோல்கணக்கில் பந்தாடியது இந்திய அணி.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

துருக்கி கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டியில் துர்க்மேனிஸ்தானை 10-0 என்ற கோல்கணக்கில் பந்தாடியது இந்திய அணி.
8 நாடுகளின் மகளிர் அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டி துருக்கியின் அலன்யா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 0-1 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக கட்டாயம் வென்றே தீர வேண்டிய நிலையில் துர்க்மேனிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. சஞ்சு அபாரமாக ஆடி ஹாட்ரிக் கோலடித்தார். 
அஞ்சு, ரஞ்சனா, தலா 2 கோல்களையும், கிரேஸ், சுமித்ரா, இந்துமதி ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ருமேனியாவுடன் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com