துருக்கி கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டியில் துர்க்மேனிஸ்தானை 10-0 என்ற கோல்கணக்கில் பந்தாடியது இந்திய அணி.
8 நாடுகளின் மகளிர் அணிகள் பங்கேற்கும் கால்பந்து போட்டி துருக்கியின் அலன்யா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 0-1 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக கட்டாயம் வென்றே தீர வேண்டிய நிலையில் துர்க்மேனிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. சஞ்சு அபாரமாக ஆடி ஹாட்ரிக் கோலடித்தார்.
அஞ்சு, ரஞ்சனா, தலா 2 கோல்களையும், கிரேஸ், சுமித்ரா, இந்துமதி ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை ருமேனியாவுடன் மோதுகிறது இந்தியா.