ஐபிஎல் போட்டியிலிருந்து இரு இந்திய இளம் வீரர்கள் விலகல்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த நாகர்கோடி கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை... 
ஐபிஎல் போட்டியிலிருந்து இரு இந்திய இளம் வீரர்கள் விலகல்!

யு-19 உலகக் கோப்பை மூலமாகக் கவனம் பெற்ற இளம் வீரர்களான கமலேஷ் நாகர்கோடி, ஷிவம் மவி ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களும் காயம் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த நாகர்கோடி கடந்த வருட ஐபிஎல் போட்டியிலும் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சமீபகாலமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடாத நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து நாகர்கோடி விலகியுள்ளார்.

கொல்கத்தா அணியைச் சேர்ந்த ஷிவம் மவியும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியரை கொல்கத்தா அணி தேர்வு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com