சாஃப் மகளிர் கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா

தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.
வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.


தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-வங்கதேசமும் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை நொறுக்கியது. தலிமா சிப்பர், மணிஷா, இந்துமதி, சஞ்சு கோலடித்தனர்.
பதிலுக்கு வங்கதேச அணியால் கோல் போட முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com