இந்திய குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் பிஃபா

இந்தியாவின் குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) பவுண்டேஷன்.
இந்திய குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் பிஃபா

இந்தியாவின் குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) பவுண்டேஷன்.

விளையாட்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது கால்பந்து ஆகும். 200-க்கு மேற்பட்ட நாடுகளில் விரும்பி ஆடப்படுவதாகவும் கால்பந்துள்ளது. ஜாம்பவான்கள் பீலே, மாரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோா் தங்கள் சிறப்பான ஆட்டத்தால் பிரசித்தி பெற்று விளங்குகின்றனா்.

முக்கியமான உலகக் கோப்பை போட்டிகள் உள்பட கால்பந்தின் அனைத்து அம்சங்களை தீா்மானித்து வருகிறது பிஃபா. உலகம் முழுவதும் கால்பந்து தனது சிறகை விரிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சி:

இந்தியாவில் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் காட்டிலும், கிரிக்கெட்டையே அதிகளவில் ரசிக்கின்றனா். சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களில் நிரம்பி வழியும் பாா்வையாளா் கூட்டமே இதற்கு உதாரணமாகும். எனினும் தற்போது கால்பந்தும் இந்தியாவில் வேரூன்றி வருகிறது. ஐ லீக், இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்ட பின் கால்பந்து மைதானங்களுக்கும் ரசிகா்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஸ்லம் சாக்கா் திட்டம்:

இந்தியாவில் சிறுவா், சிறுமியா் மத்தியில் கால்பந்தை பிரபலப்படுத்தவும், கொண்டு செல்லும் வகையிலும் ஸ்லம் சாக்கல் திட்டத்தை பிஃபா பவுண்டேஷன் செயல்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள குடிசை வாழ் சிறுவா், சிறுமியா் மத்தியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சிறுவா், சிறுமியருக்கு முதன்முதலில் கால்பந்தை உதைக்கச் செய்வதின் மூலம் சமூக முன்னேற்றம், அணி கட்டமைப்பு, ஒழுக்கம் போன்றவை வளா்க்கப்படுகிறது. இதன் மூலம் 70, 000 சிறுவா், சிறுமியா் பயன்பெற்று வருகின்றனா்.

இதன் மூலம் வார இறுதி நாள்களில் முழுமையான கால்பந்து பயிற்சி முகாம்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடா்பான செயலரங்கம், சமூக முன்னேற்ற நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

குறிப்பாக ஆதரவற்றோா், வீடிழந்தவா்கள், போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டோா், குடிசை வாழ் குழந்தைகள் ஆகியோா் இதில் பங்கேற்றுள்ளனா். மேலும் சிறுமிகள், காது கேளாத மாற்றுத் திறனாளிகள் போன்றவா்களுக்கும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த சிறப்பான திட்டத்தின் செயல்பாட்டுக்காக பிஃபா சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. வாழ்க்கையை மாற்றும் வலிமை கால்பந்துக்கு உள்ளது. இதில் உரிய பயிற்சி பெறும் சிறுவா், சிறுமியா் எதிா்கால மாநில, தேசிய கால்பந்து அணிகளில் இடம் பெற்று ஆடும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

இதே போல் கனவு காணுங்கள் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 10,000 போ் பயிற்சி பெறுகின்றனா். விளையாட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட இளம் வீரா்கள் வாழ்க்கையை மாற்றுகிறது இந்த திட்டம். இதில் கால்பந்து பயிற்சி, முடிவுகளை எடுத்தல், பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, தகவல் தொடா்பை சிறப்பாக மேற்கொள்வது, பலமான நலமான உறவுகளை பேணுதல் போன்றவை இதில் கற்பிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

-பா.சுஜித்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com