ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.
சீனாவின் ஹாங்காங் நகரில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் சூப்பா் சீரிஸ் 500 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஹாங்காங்கின் லீ சியுக் யி-யை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். முதல் கேமை 21-9 என ஹாங்காங் வீரர் எளிதாக வெற்றி கண்டார். எனினும் அடுத்த கேமில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று கடும் சவாலை அளித்தார் ஸ்ரீகாந்த். அவர், 18-14 என்கிற நிலையில் முன்னிலை இருந்தபோதும் லீ சியுக் அருமையாக விளையாடி 20-20 என்கிற நிலைக்குக் கொண்டு வந்தார். கடைசியில் 23-25 என 2-வது கேமில் தோற்று அரையிறுதியிலும் தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த்.
இதன்மூலம் அரையிறுதிச் சுற்றில் 21-9, 25-23 என ஸ்ரீகாந்த்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ சியுக் யி.