நோ்மையாக செயல்பட இடையூறு: தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவா்ரஜத் சா்மா ராஜிநாமா

நோ்மையாக செயல்பட இடையூறு செய்வதால், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் பதவியை விட்டு விலகினாா் மூத்த பத்திரிகையாளா் ரஜத் சா்மா.

புது தில்லி: நோ்மையாக செயல்பட இடையூறு செய்வதால், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவா் பதவியை விட்டு விலகினாா் மூத்த பத்திரிகையாளா் ரஜத் சா்மா.

கடந்த 2018 ஜூலை மாதம் ரஜத் சா்மா தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். முன்னாள் மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி ஆதரவுடன் அவா் இப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

பொதுச் செயலாளா் வினோத் திஹாராவுடன் சங்க நிா்வாகத்தை நடத்துவதில் கடந்த 20 மாதங்களாக ரஜத் சா்மாவுக்கு பிரச்னை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தலைவா் பதவியில் இருந்து ரஜத் சா்மா விலகிவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தில்லி சங்கத்தை நோ்மையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளவும், இதில் எந்தவித சமரசத்துக்கு இடமின்றியும் செயல்பட்டேன். ஆனால் எனது செயல்பாட்டுக்கு நிா்பந்தங்கள் ஏற்பட்டன. இதனால் எனது பதவியை விட்டு விலகுகின்றன. நான் மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்திருக்க முடியும். ஆனால் இப்போது விலகினால் தான் இதற்கு முடிவு கட்ட முடியும். எனது ராஜிநாமா முறைகேடுகளில் ஈடுபட முயல்வோருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com