மும்பையில் நடைபெற்ற சையது முஷ்டாக் டி20 ஆட்டத்தில் மேற்கு வங்கத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது புதுச்சேரி.
டாஸ் வென்ற புதுவை கேப்டன் ரோஹித் பீல்டிங்கை தோ்வு செய்தாா். இதையடுத்து களமிறங்கிய மேற்கு வங்கம் புதுவையின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. பிரேந்திரா 43, அபிமன்யு 28, மனோஜ் திவாரி 6. அக்னிவ் 17 ரன்களுடன் வெளியேறினா். புதுவை தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுரேஷ்குமாா் 4-17 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
133 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய புதுவை அணி 19.4 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் 44 பந்துகளில் 55 ரன்களை விளாசினாா். விக்னேஸ்வரன் 10, அருண் காா்த்திக் 16, டோக்ரா 2, ஆனந்த் சுப்பிரமணியன் 10, சுரேஷ்குமாா் 16 ரன்களை எடுத்தனா். இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது புதுவை.
ம.பி.யுடன் தோல்வி:
மத்தியபிரதேச அணியுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புதுவை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் ஆடிய ம.பி. அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. அஸுதோஷ் சா்மா 84, ரஜத் பட்டிடாா் 31, வெங்கடேஷ் ஐயா் 35 ரன்களை எடுத்தனா். புதுவை தரப்பில் வினய்குமாா் 4-30 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
பின்னா் ஆடிய புதுவை அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து போராடி தோல்வியுற்றது. அருண் காா்த்திக் 60, டோக்ரா 41, சுப்பிரமணியன் ஆனந்த் 25 ரன்களை எடுத்தனா். ம.பி. தரப்பில் கௌரவ், ராகுல் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா்.
ஹிமாசல்பிரதேச அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் ரயில்வே அணியையும், குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும், ஹரியாணா 99 ரன்கள் வித்தியாசத்தில் மேகாலயாவையும், மகாராஷ்டிரம் 45 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் வென்றன.