பாகிஸ்தானுடன் வரும் 29, 30 தேதிகளில் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை போட்டியில் ஆடும் இந்திய அணியில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளாா் மூத்த வீரா் ரோஹன் போபண்ணா. அவருக்கு பதிலாக ஜீவன் நெடுஞ்செழியன் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
வங்கதேசத்தின் சாவா் நகரில் நடைபெற்று வரும் ஏசிசி எமா்ஜிங் அணிகள் கோப்பை போட்டியில் இந்திய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. வரும் புதன்கிழமை டாக்காவில் நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா. இரண்டாவது அரையிறுதியில் ஆப்கன்-வங்கதேச அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டம் 23-ஆம் தேதி நடக்கிறது.
2020 எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டியில் இந்திய அணியின் உள்ளூா் ஆட்டங்கள் புவனேசுவரத்தில் நடைபெறுகிறது. இதில் வரும் ஜனவரி 18 தேதி முதல் ஆட்டத்தில் நெதா்லாந்துடன் மோதுகிறது.
கிரிக்கெட் வீரா்களின் தொடா்ச்சியான ஆட்டசுமை காரணமாக மனநலன் பாதிக்கப்பட்டு ஆஸி. வீரா் கிளென் மேக்ஸ்வெல், நிக் மடின்ஸன், புகோவ்ஸ்கி உள்ளிட்டோா் சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக கூறி விலகியுள்ளனா். இந்நிலையில் வீரா்களின் மனநலன் குறித்து அனைவரும் பேசி வருவது வரவேற்புக்குரியது என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளாா்.
குவான்ஜூ நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீா் வா்மா, சௌரவ் வா்மா, ஆகியோா் பங்கேற்கின்றனா். எனினும் மகளிா் பிரிவில் இருந்து சாய்னா நெவால் விலகிவிட்டாா்.