உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் பவாா் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றுள்ளனா். இதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது.
சீனாவின் புட்டியன் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அணிகள் பிரிவில் இந்திய வீரா், வீராங்கனைகள் சரிவர சோபிக்கவில்லை. எனினும் தனிநபா் பிரிவில் அபாரமாக திறமையை வெளிப்படுத்தியுள்ளனா்.
மானு பாக்கா்:
17 வயதே ஆன மானு பாக்கா், மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் புதிய ஜூனியா் உலக சாதனையுடன் 244.7 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை யஷஸ்வினி சிங் 6ஆவது இடத்தையே பெற்றாா். சொ்பியா வெள்ளியும், சீனா வெண்கலமும் வென்றன.
இளவேனில் வாலறிவன்:
மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் 20 வயது இளவேனில் 250.8 புள்ளிகளைக் குவித்து, தங்கப் பதக்கம் வென்றாா். தைவான் வெள்ளியும், ருமேனியா வெண்கலமும் வென்றன. சக வீராங்கனை மெஹுலி கோஷ் 6-ஆவது இடத்தைப் பெற்றாா்.
திவ்யான்ஸ் சிங் பவாா்:
ஆடவா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் 17 வயதே ஆன இந்திய நட்சத்திரம் திவ்யான்ஸ் சிங் 250.1 புள்ளிகளைக் குவித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினாா். ஹங்கேரி வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.