என் மனைவிக்கு மகிழ்ச்சி என்றால் அது எனக்கும் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் பிரபல வீரர் தோனி.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோனி பேசியதாவது:
எல்லா ஆண்களும் திருமணத்துக்கு முன்பு வெங்காயம் போலத்தான். 50 வயதுக்குப் பிறகுதான் திருமணத்தின் சாரம் புரியும். 55 வயது தான் உண்மையான காதலுக்கான வயது என்பேன். அப்போதுதான் வழக்கமான வேலையில் இருந்து நீங்கள் விலகி நிற்பீர்கள். என் மனைவி, அவருக்குத் தேவையான அனைத்தையும் அவரே முடிவு செய்துகொள்ள விட்டுவிடுவேன். என் மனைவுக்கு மகிழ்ச்சி என்றால் அது எனக்கும் மகிழ்ச்சியே. அவர் கேட்கும் எதற்கும் நான் சரி என்று சொன்னால் அவர் மகிழ்வார் என்று கூறியுள்ளார்.
தோனி, 2010-ம் ஆண்டு சாக்ஷியைத் திருமணம் செய்துகொண்டார்.