அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
2020 ஐபிஎல் போட்டி ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் டிசம்பர் 19 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இதர வீரர்களை ஏலத்தில் மட்டுமே தேர்வு செய்யமுடியும். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலம் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த வருடப் பெரிய ஏலத்தை மனத்தில் கொண்டு இந்த வருட ஏலத்தில் வீரர்களை அணிகள் தேர்வு செய்யவுள்ளன.