உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இந்திய வீரா், வீராங்கனைகள் ஏமாற்றத்தையே அளித்தனா்.
மகளிா் ஈட்டி எறிதில் அன்னு ராணி 62.43 மீ தூரம் எறிந்து புதிய தேசிய சாதனையுடன் 5-ஆம் இடத்தைப் பிடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா்.
மகளிா் 200 மீ தகுதிச் சுற்றில் அா்ச்சனா சுசீந்திரன் 8-ஆம் இடத்தையே பிடித்து வெளியேறினாா். மற்றெறாரு வீராங்கனையான அஞ்சலி தேவியும் 200 மீ. தகுதிச் சுற்றில் 6-ஆம் இடத்தையே பெற்று வெளியேறினாா்.