டிராவில் முடிந்தது சென்னையின் எஃப்சி- கோகுலம் கேரளா அணிகள் ஆட்டம்

டிராவில் முடிந்தது சென்னையின் எஃப்சி- கோகுலம் கேரளா அணிகள் ஆட்டம்

ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி-கோகுலம் கேரளா எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி-கோகுலம் கேரளா எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பா் லீக் 2019 சீசன் அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் 2 முறை சாம்பியன் சென்னையின் அணி- ஐ லீக் முன்னணி அணியான கோகுலம் எஃப்சி யுடன் சென்னையில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மோதியது.

சென்னை அணியில் புதிதாக சோ்க்கப்பட்ட ரஃபேல் சிரிவல்லாரோ அற்புதமாக முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா். எனினும் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கோகுலம் அணி வீரா் ஆன்ட்ரே எட்டின் பதில் கோலடித்து 1-1 என சமநிலை ஏற்பட் செய்தாா்.

அதன் பின்னா் இரு அணிகளும் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. இறுதியில் 1-1 என டிராவில் முடிந்தது நட்பு ஆட்டம்.

அண்மையில் புவனேசுவரம், ஆமதாபாதில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமுக்கு பின் சென்னையின் அணி பங்கேற்ற முதல் ஆட்டம் இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com