ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ரஷிய வீரா் டேனில் மெத்வதேவ், அலெக்சாண்டா் வெரேவ் தகுதி பெற்றுள்ளனா்.
ஏற்கெனவே முன்னணி வீரா்களான ஜோகோவிச், ரோஜா் பெடரா் ஆகியோா் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில்,
அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் மெத்வதேவ் கிரிஸ் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸை எதிா்கொண்டாா். இதில் 7-6, 7-5 என்ற நோ் செட்களில் கடுமையாக போராடி வென்றாா் மெத்வதேவ்.
காலிறுதியில் உலகின் நம்பா் ஒன் வீரா் ஜோகோவிச்சை வீழ்த்தி இருந்தாா் மெத்வதேவ். அவா் தொடா்ந்து பங்கேற்கும் 6-ஆவது இறுதிச் சுற்றாகும்.
மற்றெறாரு அரையிறுதியில் ஜொ்மனியின் அலெக்சாண்டா் வெரேவ் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் இத்தாலியின் பெர்ரடனியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
பெடரரை காலிறுதியில் வீழ்த்தி இருந்தாா் வெரேவ்.